யாத்திரைக்கு எடுத்துச் செல்ல வேண்டியவை

கற்பூரம் ஊதுபத்தி சாம்பிராணி ஏறுவதற்க்கு ஏற்ற தடி தேவையான அளவு உணவு - ( மலை ஏற ஏற பசி அதிகமா இருக்கும் ) தண்ணீர் - வாட்டர் பாட்டில் டார்ச் லைட் போர்வை -( தங்குவதாக இருந்தால் அல்லது குளிர் தாங்க முடியாதவர்களும் கொண்டு செல்க ) தீப்பெட்டி உப்பு அல்லது எலுமிச்சை பழம் - ( அட்டைகளின் தாக்கத் திற்க்கு ) மொபைல் போனில் டவர் வேண்டாம் என செட் செய்து கொள்ளவும் . Flight mode கால் முடியாதவர்கள் வலி நிவாரண மருந்துகளை எடுக்க மறக்காதீர் . பொங்கலில் இருந்து மே கடைசி வரை வெள்ளிங்கிரி மலை ஏற தகுந்த பருவநிலையை இயற்க்கை அளித்து உள்ளது . இந்நேரங்களில் ஒவ்வொரு மலையிலும் கடை இருக்கும் . சுக்கு நீர் , மாங்காய் , மிட்டாய் வகைகள் , கம்பங்கூல் , சோடா மற்றும் சில பொருட்கள் கிடைக்கும் . சில நேரங்களில் அன்னதானமும் உண்டு . மலை ஏறும் போதும் இறங்கும் போதும் அவசரப்படாமல் பொறுமையாக செல்ல வேண்டும் . முடிந்த வரை பேசாமல் ஏறவும் . மூச்சு நமது உடலில் போய் வருவதை ...