யாத்திரைக்கு எடுத்துச் செல்ல வேண்டியவை
- கற்பூரம்
- ஊதுபத்தி
- சாம்பிராணி
- ஏறுவதற்க்கு ஏற்ற தடி
- தேவையான அளவு உணவு- (மலை ஏற ஏற பசி அதிகமா இருக்கும்)
- தண்ணீர்- வாட்டர் பாட்டில்
- டார்ச் லைட்
- போர்வை -( தங்குவதாக இருந்தால் அல்லது குளிர் தாங்க முடியாதவர்களும் கொண்டு செல்க)
- தீப்பெட்டி
- உப்பு அல்லது எலுமிச்சை பழம் - ( அட்டைகளின் தாக்கத்திற்க்கு)
- மொபைல் போனில் டவர் வேண்டாம் என செட் செய்து கொள்ளவும். Flight mode
- கால் முடியாதவர்கள் வலி நிவாரண மருந்துகளை எடுக்க மறக்காதீர்.
பொங்கலில் இருந்து மே கடைசி வரை வெள்ளிங்கிரி மலை ஏற தகுந்த பருவநிலையை இயற்க்கை அளித்து உள்ளது. இந்நேரங்களில் ஒவ்வொரு மலையிலும் கடை இருக்கும். சுக்கு நீர், மாங்காய், மிட்டாய் வகைகள், கம்பங்கூல், சோடா மற்றும் சில பொருட்கள் கிடைக்கும். சில நேரங்களில் அன்னதானமும் உண்டு.
மலை ஏறும் போதும் இறங்கும் போதும் அவசரப்படாமல் பொறுமையாக செல்ல வேண்டும். முடிந்த வரை பேசாமல் ஏறவும். மூச்சு நமது உடலில் போய் வருவதை எண்ணிக் கொண்டு, மலையின் அழகான இயற்க்கையை ரசித்துக் கொண்டு சென்று வந்தால், ஒரு சிரமமும் இன்றி யாத்திரை முடியும்.
மலை ஏறுவது காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்த்தால் பதினொன்று அல்லது பன்னிரண்டு மணிக்குள் கிரி மலையான ஏழாம் மலையினை அடையலாம். பின்னர் தியானம் செய்வதென்றால் செய்து விட்டு கீழே இறங்கினால் மாலை ஆறு மணிக்குள் அடிவாரத்தினை அடையலாம்.
ஓம் நமசிவாய
Comments
Post a Comment