ஆதி அந்தம் இல்லாத அனாதியை தீதுறும் பவம் தீப்படு பஞ்சு - போல மோதுறும் படி முப்பொறி ஒத்துறக் காதலாகக் கருத்தில் கருதுவோம் . பொருள் துவக்கமும் முடிவும் இல்லாத இறைவனை எண்ணம் -சொல் -செயலால் சேர்ந்து நினைக்கும் போது துன்பம் தரும் தீவினைகள் அனைத்தும் தீயில் விழுந்த பஞ்சுபோல் அழிந்துவிடும். மொத்த பாடல்கள் : 130 10 பகுதிகளாக பிரித்து இங்கே வழங்கப்பட்டுள்ளது . அதாவது 1 பகுதியானது 13 பாடல்களை உடையது . ஒவ்வொரு பாடலைத் தொடர்ந்து அதன் விளக்கவுரை தொகுக்கப்பட்டுள்ளது . பாடல் எண் : 1 எல்லா உலகமும் எல்லா உயிர்களும் எல்லா பொருள்களும் எண்ணிய வல்லாளன் ஆதி பரம சிவனது சொல்லால் ஆகுமே கோனாரே !!! சர்வ வல்லமை பொருந்திய இறைவன் இந்த பிரபஞ்சத்தையும் அதிலுள்ள அண்டங்களையும் , கோள்களையும் அனைத்து உயிர்களையும் படைத்தான் என்பதை நீ உணர வேண்டும் , கோனாரே . பாடல் ...