Posts

Showing posts from April, 2014

சிவன் அணிந்துள்ள ஆபரணங்களின் உண்மை விளக்கங்கள்-3

Image
சிவன் ஒரு மின்சக்தியாலான உருவம் என்று எடுத்துக் கொண்டால் அந்த சித்திரத்தில் வேறு அணிகலன்கள் ஏன் உள்ளது? சிவன் கழுத்தில் ருத்திராட்சம் அணிந்திருக்கிறார் அல்லவா? அதை வெறும் ருத்ராட்சமாக பாராமல் அதில் ஒரு ஆகர்சன சக்தி உள்ளதென எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் புவியில் உள்ள எல்லா பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கின்றன. நிறை அதிகமான பொருள் நிறை குறைந்த பொருளை ஈர்க்கும். இரண்டு பொருள்களுக்கு இடையிலான இடைவெளி அதிகமாயினால் இந்த ஈர்ப்பின் வலிமை குறையும். இதனை சர் ஐசக் நியூட்டன் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். ஆகவே ஒவ்வொரு பொருளுக்குள்ளும் ஆகர்சன சக்தி ( Inertial Force) இருப்பது தெளிவாகிறது. 

சிவன் அணிந்துள்ள ஆபரணங்களின் உண்மை விளக்கங்கள்-2

Image
சிவன் என்பது ஒரு மகாசக்தியாகும். அச்சக்தி பிரபஞ்சம் முழுவதுமே பரவி இருக்கிறது. அதில் மின்காந்த சக்தி – மின்னல் சக்திகள் ஏராளமாக பரவியுள்ளன. இத்தகைய மஹா சக்தியை, சிவன் என்று மனிதரூபத்தில் சித்தரிக்கும் போது அவருடைய  குணங்களையும் சக்திகளையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஆபரணங்களையும் புலித்தோல் ஆடையையும் சிவனின் உருவத்திற்கு அணிவித்தனர். சிவனிடம் ஆகாசசக்திகள் இருப்பதை புரிந்து கொள்ள மின்சக்தியைப் பற்றிய தெளிவு வேண்டும். அப்போது தான் ஏன் சித்தர்கள் சிவனை ஓர் மின்சார மனிதர் என அழைத்தார்கள் என விளங்கும். உடலில் எப்படி மின்சாரத்தைச் சேர்த்து வைக்க முடியும்? என்ற கேள்விக்கும் விடை காணலாம். மின்சாரம் கண்டுபிடிப்பு – வரலாறு: முதன் முதலாய் 1799- ல் மின்சாரத்தை வோல்டா என்ற இத்தாலி நாட்டை சேர்ந்த விஞ்ஞானி கண்டுபிடித்தார்.   ஒரு கண்ணாடி பாத்திரத்தில் நீர்த்த கந்தக அமிலம் நிரப்பி அதனுள் ஒரு துத்தநாக தகட்டையும், ஒரு செப்பு தகட்டையும் ஒன்றன்மேல் ஒன்று படாமல் வைக்க வேண்டும். இந்த இரண்டு தகடுகளின் மேல்பகுதியின் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் நுனிகளை ஒரு செப்புக் கம்பி...

சிவன் அணிந்துள்ள ஆபரணங்களின் உண்மை விளக்கங்கள்-1

Image
ஓவியத்தினால் உருவத்தைக் காட்ட இயலும். ஆனால் அவ்வுருவத்தில் உள்ள பொருட்கள் எதனால் ஆக்கப்பட்டவை என்று விளக்க முடியாது. எனினும் ஒரு சில உலோகங்களை நிறம் கொண்டு அடையாளம் காண முடியும்.

திருமந்திரமும் வாழ்வியலும்

Image
சித்தர்கள் பற்றி அறிந்தோர்கட்கு அவர்களில் ஒருவரான திருமூலரைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும். சித்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஞான ,யோக மார்கத்தில் நின்று இறைவனின் பாத சரணாகதி அடைந்தவர்கள்.