திருமந்திரமும் வாழ்வியலும்
சித்தர்கள் பற்றி அறிந்தோர்கட்கு அவர்களில் ஒருவரான திருமூலரைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும். சித்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஞான ,யோக மார்கத்தில் நின்று இறைவனின் பாத சரணாகதி அடைந்தவர்கள். சித்தர்களில் இவர் சிறந்தவர், இவர் தாழ்தவர் என்றில்லை. அதே போல எல்லா சித்தர்களும் மனித வாழ்வின் உண்மைகளை உலகிற்கு எடுத்துரைத்தார்கள். ஆனால் இன்றோ நாம் சித்தன் சொன்னதையும் கேட்பதில்லை, சிலருக்கு கேட்க கூட நேரமில்லை.நாகரீக இயந்திர வாழ்க்கையில் நாம் மாட்டிக் கொண்டு பல இன்னல்களுக்கும், மாயைகளுக்கும் ஆட்பட்டுக் கொண்டுருக்கிறோம். நாளுக்கு நாள் நவீனம் என்ற பெயரில் இயற்கையை அழித்து வருகிறோம்.
இந்த நிலை மாற
நாம் யார்?
நமது கடமை என்ன ?
நாம் இப்பூவுலகில் எங்ஙனம் வாழ வேண்டும் ?
எந்த செயலுக்கு நாம் முன்னுரிமை தர வேண்டும்?
பிறப்பு, இறப்பின் சாராம்சம் என்ன?
என்பது போன்ற சில பகுத்தறிவுக் கேள்விக்கு விடை
காண வேண்டுமல்லவா. விடை காண, மெய்ஞானம்
பெற, உங்கள் ஆத்ம பலனுக்காக வாருங்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
இரண்டாம் முதன்மைச் சாலை
மையத் தொழில்நுட்ப வளாகம் ,
தரமணி அஞ்சல், சென்னை.
தொலைபேசி: 044-22542992, 22542781
நாள் : 02-05-2014
நேரம் : காலை 9 மணி
அனுமதி
: அனைவர்க்கும் இலவசம்
குத்துவிளக்கேற்றி
தொடங்கி வைப்பவர்: திருவாவடுதுறை ஆதினம்
திருமந்திரம்-
பொருளடக்கம்
1. விநாயகர் காப்பு 2. பாயிரம் 3. தற்சிறப்புப் பாயிரம் 4. முதல் தந்திரம் 5. இரண்டாம் தந்திரம் 6. மூன்றாம் தந்திரம் 7. நான்காம் தந்திரம் 8. ஐந்தாம் தந்திரம் 9. ஆறாம் தந்திரம் 10.
ஏழாம் தந்திரம் 11.
எட்டாம் தந்திரம் 12.
ஒன்பதாம் தந்திரம்
திருமந்திரப் பாடல்கள் இசை வடிவில் பெற இங்கே சொடுக்கவும்.
திருமந்திரம் மொபைல் போன் பயன்பாட்டிற்காக Play
Store -ல் உள்ளது.
தந்திரம் – Trick என்றாலே உங்களுக்கே புரிந்திருக்கும். இது வாழ்வை எப்படி சுலபமாக,
அடுத்தவர்க்கு பாதிக்கா வண்ணம், நம் இஷ்டப்படி அமைப்பது என்பது பற்றிய trick ஆகும். திருமந்திரம்
மூவாயிரம் பாடல்களை உடையது. நாமோ இந்த திருமந்திரத்தையும் தந்திரமாக கற்க
போகிறோம். அதாவது திருமந்திரத்தின் சாரம்சத்தை மட்டும் நாம் இந்த சந்திப்பில் காண
உள்ளோம்.
Comments
Post a Comment