சிவன் அணிந்துள்ள ஆபரணங்களின் உண்மை விளக்கங்கள்-1



ஓவியத்தினால் உருவத்தைக் காட்ட இயலும். ஆனால் அவ்வுருவத்தில் உள்ள பொருட்கள் எதனால் ஆக்கப்பட்டவை என்று விளக்க முடியாது. எனினும் ஒரு சில உலோகங்களை நிறம் கொண்டு அடையாளம் காண முடியும்.


சித்த ஓவியர்கள் சிவனுக்கு நாகம் (Zinc- துத்தநாகம்) என்ற உலோகத்தை அணிவிக்க வேண்டியிருந்தது.அதை எப்படி உலகமக்கள் எல்லாரும் உணர்ந்து கொள்வது என யோசித்துப் பார்த்ததும், நாகம்(zinc) என்று தெரிந்து கொள்வதற்காக, உயிருள்ள நாகத்தை (Cobra) உலோக நாகமாக சித்தரித்தார்கள் ஓவிய சித்தர்கள்.

சிவனுக்கு செம்பினால்(Copper) ஆன ஒரு ஆபரணத்தை அணிவிக்க விரும்பிய சித்தர்கள் ஓவியத்தின் வழி இவ்வுலோகம் தான்  இது என மக்களுக்கு உணர்த்த சிந்தித்தார்கள். தமிழ் அகராதியில் செம்புக்கு மதி(Moon) என்ற சொல் இருப்பதைக் கண்டனர். செம்பில் களிம்பு என்னும் விஷமான களங்கம் சேர்ந்த்திருக்கிறது. அதுபோலவே சந்திரனிலும்(Moon) களங்கம் இருப்பதை யாவரும் அறிவர். ஆகவே தான் செம்பு என்ற பொருள் கொண்ட பிறைச் சந்திரனை ஆபரணமாக அணிவித்தனர்.

சிவனது சடா முடியில் கங்கையை சித்தரிப்பது ஏன்? சிவன் அதீத சக்தி உடையவர். சக்தி(Energy) என்பதற்கு பெண் என்று ஓர் பொருள் உள்ளது. ஆகவே அந்தப் பெண்ணை, சக்தியின் அம்சமாக சித்திரத்தில் வரைந்தார்கள். சிவனின் சடா முடியில் உள்ள கங்கை என்றழைக்கப்படும் பெண்ணில் இருந்து வருவது சக்தி ஓட்டம் (Flow of energy) ஆகும்.

நம் நாட்டில் அவதரித்த சித்தர்கள் தங்களது சீவனையே சிவனாகக் கண்டார்கள். அந்தச் சீவனாகிய சிவனில் மின் சக்தியைச் சேகரித்துக் கொண்டார்கள். அவர்கள் ஒருவரைத் தொட்டால் மின்சக்தி அவரது உடலில் பாயும் என்பதையும் தெரிந்து இருந்தார்கள்.அதனால் தான் இந்தச் சித்தர்கள், தங்கள் சக்திகள் கால் வழியாக புவிக்கு சென்றுவிடாமல் தடுக்க மரத்தினால் ஆன பாதரட்சை  அல்லது பாதக்குறடு அணிந்திருந்தார்கள்.

சித்தர்கள், மகான்கள்  எல்லாம், தங்களது பாதத்தை தொட்டு வணங்க யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் பாதங்களின் விரல்கள் வழியாகவும் மின்சக்தி வெளியேறும் தன்மை கொண்டது. அதேபோல் கைவிரல்கள் வழியாகவும் மின்சக்திகள் வெளியே பாயும் அபாயம் உள்ளது. முக்கிய சீடர்களைத்தான் கையால் தலையைத் தொட்டு ஆசீர்வதிப்பார்கள்.


Comments

  1. சிவனது சடா முடியில் கங்கையை சித்தரிப்பது ஏன்? சிவன் அதீத சக்தி உடையவர். சக்தி(Energy) என்பதற்கு பெண் என்று ஓர் பொருள் உள்ளது. ஆகவே அந்தப் பெண்ணை, சக்தியின் அம்சமாக சித்திரத்தில் வரைந்தார்கள். சிவனின் சடா முடியில் உள்ள கங்கை என்றழைக்கப்படும் பெண்ணில் இருந்து வருவது சக்தி ஓட்டம் (Flow of energy) ஆகும். From the above statement, I understood one thing. The top point of the head is called Brahma Randhiram or Shasradham and if we meditate in this point, where our mind & Life (uyir) gets synchronized each one. So that we will releave from our past karmas (Aagamiya/Praraptha kaarma). By this only, people used to say, if you get dip/bath in ganga river, you will get Paba Vimochana. Becasue Ganga is in the head of siva. We have to take bath in Siva's head (Brahma Randhiram - Meditate, by meditation we get paba vimochana). While bath, water flow from top to bottom, thats flow of energy (while doing meditation, energy generates). I hope, I got it and I am correct. Thank you. Vazhga Valamudan.

    ReplyDelete
  2. For more details about the posture of NATARAJA, please refer "JEEVA BRAHMA IKYA VEDHANTHA RAGASIYAM BY CUDDAPPASAMI". FOR BOOK DETAILS CONTACT 044 2835 0953, ROYAPET, CHENNAI.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருமூலரின் அணு ஞானம்

சிவவாக்கியர் பாடல் (தமிழில் வரிகளுடன்)

குதம்பைச் சித்தர் பாடல்கள்