சிவன் அணிந்துள்ள ஆபரணங்களின் உண்மை விளக்கங்கள்-3

சிவன் ஒரு மின்சக்தியாலான உருவம் என்று எடுத்துக் கொண்டால் அந்த சித்திரத்தில் வேறு அணிகலன்கள் ஏன் உள்ளது? சிவன் கழுத்தில் ருத்திராட்சம் அணிந்திருக்கிறார் அல்லவா? அதை வெறும் ருத்ராட்சமாக பாராமல் அதில் ஒரு ஆகர்சன சக்தி உள்ளதென எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் புவியில் உள்ள எல்லா பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கின்றன. நிறை அதிகமான பொருள் நிறை குறைந்த பொருளை ஈர்க்கும். இரண்டு பொருள்களுக்கு இடையிலான இடைவெளி அதிகமாயினால் இந்த ஈர்ப்பின் வலிமை குறையும். இதனை சர் ஐசக் நியூட்டன் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். ஆகவே ஒவ்வொரு பொருளுக்குள்ளும் ஆகர்சன சக்தி (Inertial Force) இருப்பது தெளிவாகிறது. 



சிவன் கழுத்தில் இருக்கும் ருத்ராட்ச மாலையை விஞ்ஞான கண்ணோட்டத்தில் பார்த்தால் அப்போது அவைகளின் சக்தி ஒன்றுக்கொன்று இழுத்துக்கொண்டிருக்கிறது  என்றும், ஒரு ருதிராட்ச காய்க்கும் இன்னொரு ருத்திராட்ச காய்க்கும் உள்ள இடைவெளி குறைவாக இருப்பதால் ஆகர்சன சக்தியை சிவன் அதிகம் பெற்றிருக்கிறார்.

சிவனது நெற்றியில் மூன்று விபூதிப் பட்டைகள் இருக்கின்றன. புருவ மத்தியில் ஒரு போட்டும் வைக்கப்பட்டுள்ளது. விபூதிப் பட்டைகளுக்குக் காரணம்  என்ன என்று ஆராய்ந்தால் , விஞ்ஞானக் கண்களுக்கு அது மூன்று கோடுகளாகத் தெரிய வேண்டும். புருவ மத்தியில் உள்ள போட்டு புள்ளியாகத் தெரிய வேண்டும்.

உலகில் உள்ள எல்லா பொருள்களும் ஒன்றையொன்று இழுக்கின்றன. அந்த ஆகர்ஷன சக்தியின் திசை இடைப்பட்ட இரண்டு பொருள்களுக்கும் செங்குத்தாக இருக்கும்.  அப்படி பார்த்தால் பூமி என்ற அதிக நிறையுடைய ஒரு பொருள் , அதன் மேற்ப்பரப்பில் உள்ள ஒரு குறைந்த எடையுடைய பொருளை ஈர்க்கின்றது. அந்த பொருளின் பல பாகங்களில் இருந்தும், பூமியின் மையம் நோக்கி இழுக்கும் கோடுகள் எல்லாம், சமாந்திரக் கோடுகளாக( Equal perpendicular lines) இருக்கும். காரணம் என்ன என்றால் பூமியின் ஆரம் மட்டுமே கிட்டத்தட்ட 6200 கிலோ மீட்டர்  ஆகும். பூமியின் ஒட்டுமொத்த ஆகர்ஷன ஈர்ப்பு மேற்ப்பரப்பில் உள்ள பொருளில் ஒரு குறிப்பிட்ட புள்ளி வழியாக செங்குத்தாக செயல்படுகிறது. அதுவே அந்த பொருளின் குருத்துவ கேந்திரம் (Centre of gravity) என்று அழைக்கப்படும். 

சிவன் படத்தில் விபூதி என்று உணர்த்திய அந்த மூன்று கோடுகளும் மூன்று சக்தி நிலைகள்.
ü விழா நிலை
ü விழும் நிலை
ü இடைச்சமநிலை
புருவமத்தியில் உள்ள பொட்டு- குருத்துவ கேந்திர புள்ளி .

Comments

Popular posts from this blog

திருமூலரின் அணு ஞானம்

சிவவாக்கியர் பாடல் (தமிழில் வரிகளுடன்)

குதம்பைச் சித்தர் பாடல்கள்