Posts

Showing posts from 2013

ஞானத்தை அடையும் மார்க்கங்கள்

Image
ஞானத்தை அடையும் மார்க்கங்கள் இறைவனை அடைவதற்கு நமது யோகிகள் பல விதமான முறைகளைக் கூறியுள்ளனர்.              ü   தாசமார்க்கம்  -( சரியை )- கடவுளிடம் ஆண்டவனும் அவன்  அடியார்போல இருந்து பக்தி செய்வது. ü   சற்புத்திர மார்க்கம் - ( கிரியை) - நண்பர் போல இருந்து இறைவனை நண்பனாக்கி எண்ணி பக்தி செய்வது. ü   சக மார்க்கம் - ( யோகம் )- தகப்பனும் பிள்ளையும் போல இருந்து பக்தி செய்வது. ü   சன் மார்க்கம் - ( ஞானம் )- நீ –நான் என்கிற பேதமின்றி தானே இறைவனாக பாவித்தல். இந்நால்வகை முறைகளால் அடையும் முக்திகள்       சரியை- சாலோக –இருதய சிதாகாசமாகிய கடவுள் உலகத்தில் வாழ்தல்.       கிரியை- சாமீப- கடவுள் சமீபத்தில் வாழ்தல்.       யோகம்- சாரூப- கடவுள் உருப்பெற்று வாழ்தல்.       ஞானம்- சாயுச்சிய- கடவுளுடன் அத்துவிதமாக வாழ்தல். ஞானம் என்னும் வீட்டிற்க்கு சரியை, கிரியை, யோகம் என்னும் மூன்று முதன்மையான படிகளும், சரியை முதல் ஞா...

பாம்பாட்டி சித்தர் கருத்துகள்

Image
பாம்பாட்டி சித்தர் கருத்துகள்  1. குருவே அனைத்திற்க்கும் மூல காரணம். மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றும் சத்குருவை (குருவுக்கெல்லாம் குருவாக அமைந்த இறைவன்) நோக்கி இருத்தல் வேண்டும் .கடவுள் யார் என விளக்கும் குருவை வணங்கி வாழ வேண்டும்.

மஹாபாராதம் சொல்வேந்தர் சுகி சிவம் சொற்பொழிவு

Image
மஹாபாராதம்                      சொல்வேந்தர் சுகி சிவம் சொற்பொழிவு                 20 பாகங்களாக அதாவது 20 கோப்புகளாக உள்ளது

Vinayagar chadhurthi songs

Image
1.Ganesa Panchatram -  Download 2. Karunai sarame -   Download 3. Onbathu Kolum - Download 4. Sivanar thiru magane -  Download 5. Suzhi pottu - Download 6. Velanukku moothavane-  Download 7. Vinayagane -  Download

நாகா சாதுக்களின் ரகசியங்கள்

Image
                                             நாகா சாதுக்களின் ரகசியங்கள் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

சித்திரக்குடி - சிவாலயம்

Image
சித்திரக்குடி - சிவாலயம்  தஞ்சை மாவட்டம்  1958 லிருந்து  தொடர்ந்து முக்கால பூஜை நடைபெற்ற சிவலயமாம் நம் சித்திரக்குடி சிவன் கோவில்.  மாலை  6 மணி முதல் ஒன்பது மணி வரை தினந்தோறும் மேளதாளம் முழங்க சிவன் சிறப்பிக்கப்பட்டு வந்தார் .ஆனால்  கடந்த 1975லிருந்து 2008 ஆம்  ஆண்டு வரை  கிராம மக்களின் அலட்சியத்தால் எவ்வித பூஜையும் நடவாமல் பாழடைந்து விட்டது. 2008 ல் திருகோவிலின் உட்புற மண்டப சுவர் இடிந்து விழுந்தும் இது கணம் யாரும் அதை பழுது பார்க்கவில்லை. 2008 லிருந்து  ஒவ்வொரு பிரதோஷம் தவறாமல் பூஜைகள் திரு.பரமேஸ்வரன் என்பவரால் சிறப்புடன் இன்றுமட்டும் செய்யப்பட்டு வருகிறது . திருக்கோவிலின் சீரமைப்புப் பணிக்கென நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.

இடைக்காடர் - முன்னுரை

Image
18 சித்தர்களில் யார் பெரியவர் ?யார் சிறியவர் ? என்ற வினா   பொதுவாக மக்களிடத்தே நிலவுகின்றது. அவர்கள் அனைவரும் ஒரே மதிப்புடையவர்கள் தான் எனபது மட்டுமே உண்மை. ஒருவர் மருத்துவத்தில் சித்தம் பெற்றிருந்தால் இன்னொருவர்  வான அறிவியலில் சித்தம் பெற்றிருந்தார் . இவ்வாறாக பல்வேறு துறைகளில் சித்தம் கண்டனர். அவர்களில் ஒருவரான சித்தர் இடைக்காடர் எனும் வானவியல் வல்லுநர்  பற்றியும் அவரின் பாடல்களையும் இனி காண்போம் . சித்தர் இடைக்காடர் - பற்றி  பிறப்பு :மதுரைக்கு கிழக்கே உள்ள கோனார்கள் கிராமமான இடைப்பாடி எனும் ஊரில் இடையர் குலத்தில் தோன்றியவர் . குரு : போகர் மற்றும் கருவுரார்  சீடர் :அழுகினி சித்தர் மற்றும் குதம்பை சித்தர்  தினம் செய்தது :   ஆடு மாடு மேய்ப்பதும்   -புல்லாங்குழல் ஊதுதலும்   -யோகத்தில் ஆழ்ந்து விடுவது .  ஞானம் பெற்றமை :  இவர் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு சதா இறைசிந்தனையில் மனம் லயித்து துறவு நிலையில் வாழ்க்கை நடத்திகொண்டிருந்த இவரை, போகர் வந்து பால் கேட்க -அவருக்கு பால் மற்றும் இதர உண...

அழுகண்ணிச் சித்தர் பாடல்கள்

Image
அழுகண்ணிச் சித்தர் பாடலுக்கு இங்கே சொடுக்கவும் . To download Azhukannich siddhar Song (pdf) , Click here .

இடைக்காடர் சித்தம் - 7

Image
பாடல் எண் :79 ஐம்பொறி அடங்கினவே   தும்பீபற - நிறை   அருவே பொருளாம் எனத்தும்பீபற   செம்பொருள்கள் வாய்த்தனவே   தும்பீபற - ஒரு   தெய்வீகம் கண்டோம் என்றே   தும்பீபற .

இடைக்காடர் சித்தம்- 6

Image
பாடல் எண் ;66 சாகாது இருப்பதற்குத்தான் கற்ற கல்வி அன்றோ   வாகான மெய்க்கல்வி வகுத்தறி நீ கல்மனமே . பிறப்பு - இறப்பு என்ற வரிசையில் மரணத்தை தவிர்க்க வழிமுறைகளை போதிக்கும் ஞானமே   உண்மையான கல்வி . இதை நீ உணர்ந்து கொள் . பாடல் எண் :67 எல்லாப் பொருள்களையும் எண்ணப்படி படைத்த   வல்லாளன் தன்னை வகுத்தறி நீ புல்லறிவே . அற்ப - அறிவுடைய மனிதனே - பிரபஞ்சத்தையும் அதில்   உள்ள எல்லாப் பொருளையும் தன் எண்ணப்படி படைத்துள்ளான் . அற்ப அறிவுடைய மானிடனே இறைவனை நன்குணர்ந்து கொள்வாயாக . பாடல் எண் :68 கட்புலனுக்கு எவ்வளவுங் காணாது   இருந்தெங்கும்   உட்புலனாய் நின்ற ஒன்றை உய்த்தறி நீ புல்லறிவே . அற்ப அறிவுடைய மானிடனே ! பரம்பொருளை எப்படி நோக்கினும் உன் புறக்கண்களால் காண முடியாது . எல்லாவற்றிலும் இறைவன் மறைந்தே இருக்கிறான் . இந்த நுட்பத்தை   அற்ப அறிவுடைய நீ விரிவாக அறிந்து கொள் . பாடல் எண் :69 விழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்கம் உண்டாகும் ...