இடைக்காடர் - முன்னுரை



18 சித்தர்களில் யார் பெரியவர் ?யார் சிறியவர் ? என்ற வினா  பொதுவாக மக்களிடத்தே நிலவுகின்றது. அவர்கள் அனைவரும் ஒரே மதிப்புடையவர்கள் தான் எனபது மட்டுமே உண்மை. ஒருவர் மருத்துவத்தில் சித்தம் பெற்றிருந்தால் இன்னொருவர்  வான அறிவியலில் சித்தம் பெற்றிருந்தார் . இவ்வாறாக பல்வேறு துறைகளில் சித்தம் கண்டனர். அவர்களில் ஒருவரான சித்தர் இடைக்காடர் எனும் வானவியல் வல்லுநர்  பற்றியும் அவரின் பாடல்களையும் இனி காண்போம் .

சித்தர் இடைக்காடர் - பற்றி 



பிறப்பு :மதுரைக்கு கிழக்கே உள்ள கோனார்கள் கிராமமான இடைப்பாடி எனும் ஊரில் இடையர் குலத்தில் தோன்றியவர் .
குரு : போகர் மற்றும் கருவுரார் 
சீடர் :அழுகினி சித்தர் மற்றும் குதம்பை சித்தர் 
தினம் செய்தது : ஆடு மாடு மேய்ப்பதும்  -புல்லாங்குழல் ஊதுதலும்  -யோகத்தில் ஆழ்ந்து விடுவது . 
ஞானம் பெற்றமைஇவர் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு சதா இறைசிந்தனையில் மனம் லயித்து துறவு நிலையில் வாழ்க்கை நடத்திகொண்டிருந்த இவரை, போகர் வந்து பால் கேட்க -அவருக்கு பால் மற்றும் இதர உணவுகளை கொடுத்து உபசரித்தார் .இதற்குப் பயனாக அந்த சித்தர் இவருக்கு ஞான உபதேசம்(வைத்திய-வாத -யோக) செய்து போனார். அதனால் சித்தி அடைந்து இடைக்காட்டு சித்தரானார்.

இடைக்காடர் வானத் தேவர்களை வசியம் செய்தது எப்படி ?

ஒருமுறை மழை இல்லாது நாடு 12 ஆண்டு வறண்டு போகும் என முன் அறிந்து , இவர் தம் ஆடுகளுக்கு எருக்க  இலையினை கொடுத்து பழக்கினார். குருவரகு எனும் தானியத்தை சேற்றோடு கலக்கி சுவர் வைத்து குடிசை ஒன்று கட்டினார். அதில் தம் ஆடுகள் இருக்கை தின்று ஊறலால் சுவரில் தேய்க்க; உதிர்ந்த சிறு தானியத்தை சாப்பிட்டு வாழ்ந்தார். நாடு வற்க்கடமாய் ,உயிர்கள் எல்லாம் அழிய - இவரும் ,இவரின் ஆடுகளும் மட்டும் உயிரோடு இருப்பதை அறிந்த நவ கிரகங்களும் இவரிடத்து வந்தன. சித்தர் எதிர் கொண்டு ஆட்டின் பாலில் குருவரகை பாகஞ் செய்து உபசரித்தார். கிரக தேவர்கள்  உண்ட மயக்கத்தில் உறங்கினர் .அந்த சமயத்தில் சித்தர் ஒன்றுடன் ஒன்று மாறுகொண்டு உலகத்தை வருத்திய கிரகங்களை மழை பெய்வதற்கு வேண்டியபடி மாற்ற , உடனே நன்மழை பொழிந்தது . 


கிரஹ தேவர்கள் விழித்ததும் நிலை உணர்ந்தனர் . இவ்வாறு இவர் வான தேவர்களை வசப்படுத்தினார்.




Comments

Popular posts from this blog

திருமூலரின் அணு ஞானம்

சிவவாக்கியர் பாடல் (தமிழில் வரிகளுடன்)

குதம்பைச் சித்தர் பாடல்கள்