பூரணம் கண்டோர் இப்பூமியிலே வரக் காரணம் இல்லையடி – குதம்பாய் காரணம் இல்லையடி. பூரணம் – முழுமை . மனிதன் இவ்வுலகில் பிறப்பதர்க்கு காரணம், முற்பிறவியில் முழுமை பெறாமையே. ஓங்காரம் நீங்கரப் பூரணம் கண்டோர்க்கு சாங்காரம் இல்லையடி- குதம்பாய் சாங்காரம் இல்லையடி. சாங்காரம்- சாவு ஓம் யென்னும் அட்சரத்தை உண்மை உணர்ந்து ஓதியவன், சாவை வெல்வான். அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினை பிண்ட்த்துள் பார்ப்பாயடி- குதம்பாய் பிண்ட்த்துள் பார்ப்பாயடி. Download this as pdf அண்டம்- உலகம் பிண்டம்- உடம்பு இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். நம் உடலிலும் இருக்கின்றார். எங்கும் நிறைந்தே இருக்கின்ற சோதியை அங்கத்துள் பார்ப்பாயடி- குதம்பாய் அங்கத்துள் பார்ப்பாயடி. அங்கம்- உடம்பு இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். ஆகவே உன் உடம்பில் இருப்பவனை, உன்னை அறிந்து உற்று நோக்கு. தீண்டா விளக்கினைத் தெய்வக் கொழுந்தினை மாண்டாலும் போற்றிடுவாய்- குதம்பாய் மாண்டாலும் போற்றிடுவாய். மாண்டால்- செத்தால் யாராலும் தொடப்படா...
I am not able to open the file
ReplyDelete