சிவவாக்கியம் கூறும் உண்மைகள்- 2

செய்யதெங்கி லேயிளநீர் சேர்ந்தகார ணங்கள்போல் ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோவில் கொண்டனன் ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோவில் கொண்டபின் வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே. உயரமான தென்னை மரத்தில் உள்ள தேங்காயில் இளநீரானது எப்படி வந்ததோ, அதே போல் சிவன் (ஐயன்) என்னுள்ளத்தில் வந்தார். ஐயன் என்னுள்ளத்தில் குடி கொண்ட பின், நான் உலக மக்களிடம் ஒன்றும் பேசுவதில்லை. கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா கோயிலுங் குளங்களுங் கும்பிடும் குலாமரே கோயிலு மனத்துளே குளங்களு மனத்துளே ஆவது மழிவது மில்லையில்லை இல்லையே. கோவில், குளங்கள் என்று புறப் பொருள்களையே கும்பிடும் மக்களே. உண்மையில் கோவிலும், குளங்களும் புறப் பொருளன்று. எவன் ஒருவன் தன மனதை கோவிலாகவும், குளமாகவும் எண்ணி; அதற்க்கான மன வலிமை பெற்று; தன்னை தியாகப்படுத்துவானோ அவனுக்கு இனி ஆக்கமும் இல்லை அழிவும் இல்லை. பாடல்கள் இசை வடிவில் பெற click here.