Posts

Showing posts from May, 2014

சிவவாக்கியம் கூறும் உண்மைகள்- 2

Image
செய்யதெங்கி லேயிளநீர் சேர்ந்தகார ணங்கள்போல் ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோவில் கொண்டனன் ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோவில் கொண்டபின் வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே. உயரமான தென்னை மரத்தில் உள்ள தேங்காயில் இளநீரானது எப்படி வந்ததோ, அதே போல் சிவன் (ஐயன்) என்னுள்ளத்தில் வந்தார். ஐயன் என்னுள்ளத்தில் குடி கொண்ட பின், நான் உலக மக்களிடம் ஒன்றும் பேசுவதில்லை. கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா கோயிலுங் குளங்களுங் கும்பிடும் குலாமரே கோயிலு மனத்துளே குளங்களு மனத்துளே ஆவது மழிவது மில்லையில்லை இல்லையே. கோவில், குளங்கள் என்று புறப் பொருள்களையே கும்பிடும் மக்களே. உண்மையில் கோவிலும், குளங்களும் புறப் பொருளன்று. எவன் ஒருவன் தன மனதை கோவிலாகவும், குளமாகவும் எண்ணி; அதற்க்கான மன வலிமை பெற்று; தன்னை தியாகப்படுத்துவானோ அவனுக்கு இனி ஆக்கமும் இல்லை அழிவும் இல்லை. பாடல்கள் இசை வடிவில் பெற  click here.

சிவவாக்கியம் கூறும் உண்மைகள் -1

Image
தூரந்தூரந் தூரமென்று சொல்லுவார்கள் சோம்பர்கள் பாரும்விண்ணு மெங்குமாய்ப் பரந்தவிப் பராபரம் ஊருநாடு காடுதேடி யுழன்றுதேடு மூமைகாள் நேரதாக வும்முளே யறிந்த்துனர்ந்து கொள்ளுமே. பூமி முதல் ஆகாயம் வரைக்கும் உள்ள சர்வ இடங்களிலும் இருக்கின்ற பராபரத்தை, அறிந்துகொள்ளும் வழியை உணராமல் சோம்பேறிகளெல்லாம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள். அவர்களுடைய பேச்சைக் கேட்டு ஊர், நாடு , காடு முதலான இடங்களுக்கு சென்று தேடித்தேடி அலுத்த அறிவீனர்களே! இனியாவது உங்களுக்குள்ளாகவே இருக்கும் அந்த இறைவனை உணர்ந்து கொள்ளுங்கள். நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர் வாழவேண்டு மென்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே காலனோலை வந்தபோது கையகன்று நிற்பிரே ஆலமுண்ட கண்டர்பாத மம்மைபாத முண்மையே. உலகத்தில் வசதியாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நினைத்து, பெரிய வீடு கட்டி, பெரிய கதவையும் வைத்து அடைக்கும் மாந்தரே! காலன் என்னும் எமனின் அழைப்பு வந்தால் நீர் வீட்டை விட்டல்லவா போவீர், நான் சொல்வது (ஆலமுண்ட கண்டன்) சிவன் மற்றும் சக்தி பாதங்களின் பேரிலும் சத்தியமாக மெய்யாகும்.  பாடல்கள் இசை வடிவில் பெற click her...

திருமூலரும் கார்பன் அணுவும்

Image
“சோடச மார்க்கமுஞ் சொல்லுஞ்சன் மார்க்கிகட்கு ஆடிய வீராறி னந்தமு மீரேழிற் கூடிய அந்தமும் கோதண்ட முங்கடத் தேறிய ஞான ஞேயாந்தத் திருக்கவே” ஈறாரின் அந்தமும் என்பது 2* 6= 12 ஈரேழிற் கூடிய அந்தமும் என்பது 2*7=14 அணுவைப்பற்றி ஆராய்ச்சிகள் செய்த அணு விஞ்ஞானிகள் அணுக்கள் பற்றி விளக்கம் கூறும்போது சாதாரண கார்பன் அணுவின் எடை 12 என்றும், நிலையான கார்பன் ஐசோடோபின் அனுஎடை 1 4 என்றும் , இவை ஒரு நாளும் சிதைந்து அழிந்து போவதில்லை என்றும், ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளார்கள். மேற்கூறிய திருமந்திரப் பாட்டில் திருமூலரும் அணுவின் கணக்கைச் சொல்லியிருப்பதைப் பார்த்தால் அணுவின் சக்திகள் இந்த ஐசோடோபுகளில் என்றும் அழியாமல் இருப்பது போல, பஞ்சாட்சர அட்சரங்களிலும் இத்தகைய அழியா மகா சக்திகள் இருப்பதைக் குறிப்பிடுகின்றார் என்றால் அணுவைப் பற்றியும், அணு விஞ்ஞானத்தைப் பற்றியும் திருமூலருக்கு நன்கு தெரிந்து இருக்க வேண்டும். 

அணுக்களின் செயல்பாடு

Image
பூமியில் உள்ள அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் யாவும் அணுக்களால் ஆக்கப்பட்டவை. அணு இல்லையேல் பிறப்பதேது, இறப்பதேது? கல் என்னும் உயிரில்லா அசையா பொருளே ஆனாலும் அதனுள் இருக்கும் அணுவில் எலக்ட்ரான்கள் உட்கருவை சுற்றி தான் வருகிறது. உயிரில் பூதாகாயம, குணமய ஆகாயம், குணரகித ஆகாயம், சூரியாகாயம், சிதாகாயம் எல்லாம் கலந்தே விளங்குகிறது. வீட்டின் சாளரத்தில் சூரிய ஒளிக்கிரணம் பாயும் போது நுண்ணிய ஒளி அணுக்கள் கீழும் மேலும் சென்று கொண்டிருப்பது விளங்குவது போல உடம்பில் உள்ள முதன்மையான நூற்றியோரு ஒளி அணுக்கள் கீழும் மேலும் மற்றும் அண்டாகாயத்திலும் சஞ்சரிக்கின்றன. முதுகுத் தண்டை பற்றியுள்ள கீழ்நோக்கிச் செல்லக் கூடிய நாடிகள் நூற்றொன்று உள்ளது. அதில் ஒரு நாடி மாத்திரம் மேல் நோக்கி செல்லும். இந்த நூற்றியொரு நாடியிலும் அணுக்கள் சஞ்சரிக்கின்றன. இவ்வணுக்கள் பல நிறங்கள் கொண்டு விளங்குவதால் இவ்வனுக்களின் குவியலை பிறக்கம் ( Collection of atoms) என்று கூறுவர். அணுக்கள் சடமயமானவை. அவற்றை சேர்த்து வேலை செய்ய வைக்க, சித்துருவாகிய சிவசக்தியும் அவைகளைக் கடந்தும் அவைகளின் ஊடேயும் நின்று பணி செ...

இலிங்கத்தின் பொருள் – திருமூலர்

Image
“இலிங்கநற்பீடம் இசையும் ஓங்காரம் இலிங்கநற் கண்ட நிறையு மகாரம்   இலிங்கத்துள் வட்ட நிறையும் உகாரம் இலிங்க மகாரநிறைவிந்து நாதமே!”    - திருமூலர் சதாசிவ லிங்கத்துக்குரிய பீடம் அல்லது அடிப்பாகம் ஓங்காரம் ஆகும். இலிங்கத்தின் கண்டம் மகாரம் ஆகும். இலிங்கத்தின் வட்டமாகிய பகுதி உகாரம் ஆகும். ஆகவே அருவுருவாக உள்ள இலிங்கத்தின் திருமேனி  அகரம்  உகர மகர விந்து நாதமாகிய பிரணவமாகும். ஆத்ம லிங்கமாவது ஆன்மாவே லிங்கம் ஆகும். லிங்கம் என்பது அணுதத்துவங்களின் வெளிப்பாடாய் உள்ள சிவன்- சக்தி சேர்க்கை ஆகும்.  சிவன்- அகாரம் ( எல்லாவற்றுக்கும் முதலாய் உள்ளது) சக்தி- உகாரம் ( எல்லாம் உயிர் பெற்று நிற்க உதவுவது) அகரம்- சிவம்- விந்து- 8 உகரம்- சக்தி- நாதம் -2 உண்மையில் ஓங்காரம் என்பது அகார, உகார மற்றும் மகாரங்களின் சேர்க்கை ஆகும். அ + உ +ம் = ஓம் A+U+M= OM (AUM) இந்த எழுத்துக்களை அர்த்தம் தெரிந்து மனதில் உச்சரித்தால் ஆகாய அணுக்களில் சூட்சம அசைவுகள் ஏற்படும். அதாவது விசையும் அதோடு கூடிய அதிர்வலையும் உண்ட...

சித்தர்களும் மெய் அறிவியலும்

Image
நம் சித்தர்கள் சுவாசத்திற்கும் அணுக்களுக்குமான தொடர்புகளை கண்டுள்ளனர். பஞ்சாட்சரம்  தத்துவம் ஒரு சுவாசத்தில் இதன் அளவு ந பூமி  20 ம அப்பு –நீர் 15 சி தேயு – நெருப்பு 9 வா வாயு 5 ய ஆகாசம் 2 மொத்தம் 51 இந்த ஐம்பத்தி ஒன்றில் அணுக்கள் அடக்கப்பட்டது. ஐந்து சதுரத்தில் இந்த சக்திகளான ஐம்பத்தி ஒரு அட்சரத்தின் தத்துவங்களை சித்தர்கள் அடக்கிவிட்டார்கள். இதைத்தான் திருவம்பலச்சக்கரம் என்கிறார்கள். 15 ம 9 சி 5 வா 2 ய 20 ந 5 வா 2 ய 20 ந 15 ம 9 சி 20 ந 15 ம 9 சி 5 வா 2 ய 9 சி 5 வா 2 ய 20 ந 15 ம 2 ய 20 ந 15 ம 9 சி 5 வா...

திருமூலரின் ஒளிக்கதிர் ஆய்வு

Image
சீவனின் அணு அளவை சொல்லிய திருமூலர் பாட்டு ஆகாயத்தில் பரவி இருக்கும் கதிர்களின் தன்மைகளையும் பின்னர் எடுத்துரைக்கிறது. முதல் தரமான உண்மை ரேகை கதிர்கள்- 22 இரண்டாம் தர உண்மை ரேகை கதிர்கள் – 33 மூன்றாம் தர உண்மை ரேகை கதிர்கள்- 44 பிரபஞ்ச நாயகனான இறைவனிடம் இருந்து வெள்ளம் போல் பிரவாகிக்கும் ஒளிரேகை - 1 மொத்தம் – நூறு (100) விதமான ஒளிரேகைகள். பிரபஞ்சத்தில் அழிவில்லாத படைப்பு என்னவென்றால் ஒளி மயமான ஈதர் அணுக்களால் இறைவனின் சக்திகள் நிரம்பி வழிந்தோடிக் கொண்டுள்ளது. அந்த ஒரு ஒளிரேகை தான் மேலே குறிப்பிட்ட 99 -இல் 1 ஒளிரேகையும் சேர்த்து  100 ஆக முழுமையாக ஆகாயத்தில் இறைவன் ஒளிமயமான அணுக்களால் நிரப்பியிருக்கிறது தெரிகிறது என்கின்றனர் ஞானிகள்.

திருமூலரின் அணு ஞானம்

Image
மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயி  ரொன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது வாயிரமானால் ஆவியின் கூறு நூரயிரத்தொன்றே.      --- திருமந்திரம் திருமூலரின் கணக்குப்படி, ஜீவ அணுவின் அளவானது, மாட்டின் ஒரு மயிரை நூறு கூறிட்டு, பின்னர் அந்த ஒவ்வொரு கூறையும் ஆயிரம் கூறிட்டால் கிடைக்கும் ஒரு கூறின் அளவே அணுவின் அளவு. அதாவது ஜீவ அணுவினுடைய பரிமாணம் இலட்ச்சத்தில் ஒரு பங்கு. அணுவின் கணக்கை இவ்வளவு துல்லியமாக கணக்கிட்டுச் சொல்லும் ஞான அறிவு எவ்வளவு மகத்தானது என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மூவகை பஞ்சாட்சரம்

Image
பஞ்சாட்சரம் என்கிற நமசிவய என்னும் ஐந்து எழுத்து மந்திரம் உயிர்க்கு உயிர் நாடியாக விளங்குகிறதென்று மறைகள் கூறுகின்றன. புறவழிபாட்டுக்கான பஞ்சாட்சரம்- நமசிவாய இதில் “ந”கரம் – பிருத்திவி தத்துவத்தையும் மகரம் – அப்பு தத்துவத்தையும் சிகரம்- தேயு தத்துவத்தையும் வகரம்- வாயு தத்துவம் யகரம்- ஆகாய தத்துவத்தையும் குறிக்கும். பஞ்சாட்சரத்தில் 1. தூலம்  2. சூக்குமம் 3. அதிசூக்குமம் என மூவகை உண்டு. தூல பஞ்சாட்சரம்- சிவாயநம சிவாயநம என மானசீகமாக சொன்னால், சூக்கும அசைவுகள் ஆகாய அணுக்களில் ஏற்ப்பட்டு ஆகாயத்தில் சேர்ந்த மூலாதாரம் முதலாக நிற்கும். நமசிவாய என்ற தேவனை தேகத்தில் சேர்க்கும். சூக்கும பஞ்சாட்சரம்- சிவாயநம ஒளி அலைகள் “சிவாயநம”  என்பதை ஒளியாக நினைத்து ஓதல் சூக்கும பஞ்சாட்சரமாகும். இத்திருவைந்தெழுத்தில் சிகரம்- சிவனையும், வகரம்- சக்தியையும், யகரம்- சீவனையும், நகரம்- மலத்தையும், மகரம்- மாயையையும் குறிக்கும். இந்த பஞ்சாட்சர செபத்தால் துன்பம் தரும் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகியக ஐம்மலங்களையும் நீக்கும். சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தைச...

சிவன் அணிந்துள்ள ஆபரணங்களின் உண்மை விளக்கங்கள்-4

Image
சிவன் காதில் குண்டலங்கள் ஏன் உள்ளது? ஓர் இடத்தில் இருந்து அதிக தூரத்தில் உள்ள இன்னொரு இடத்துக்கு பேச்சையும் பாடல்களையும் கம்பியில்லாமல் அனுப்புவதை தான் ஒலிபரப்புதல் என்கிறோம். ஆகாயத்தில் பரவிக் கிடக்கும் ஈதர் என்று சொல்லப்படும் மின்காந்த அலைகளின் சக்தி வழியாக அலைகளை அதிக வேகமாக பரப்புகிறார்கள். இந்த ஈதர் என்பது கண்ணுக்கு புலப்படா சாதனம். ஈதர் பிரபஞ்சம் முழுவதும் உள்ளது. இது உலகிலுள்ள எல்லா பொருள்களையும் ஊடுருவிச் செல்லும்.  ஒலி அலைகள் வட்ட வடிவில் உண்டாகின்றன என்பதால் சிவனது காதுகளில் வட்ட வடிவமான குண்டலங்களை அணிந்திருப்பதாக சித்தரித்து இருக்கிறார்கள். சப்தங்களை காதுகளின் வழி உணர முடிந்ததால் காதில் குண்டலங்களை அணிவித்திருந்தார்கள். சிவனுக்கு பூணூல் ஏன்? புலித்தோல் ஏன்? சிவன்  படத்தில் பூணூல் அணிவித்து இருப்பதாக சித்தரித்து இருப்பது ஏனெனில் வெவ்வேறு இடங்களில் இருந்து வரும் மின்சார அலைகள் எல்லாம் வெவ்வேறு அலைநீளமுள்ளவை, என்னும் கருத்தை உள்ளடக்கியது. எல்லா அலைகளும் ஒரே அலை நீளமுடையதாக இருப்பின் சப்தங்கள் ஒன்று சேர்ந்து தெளிவாக கேட்க்க முடியாது. அதனால் ...