சிவவாக்கியம் கூறும் உண்மைகள் -1


தூரந்தூரந் தூரமென்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணு மெங்குமாய்ப் பரந்தவிப் பராபரம்
ஊருநாடு காடுதேடி யுழன்றுதேடு மூமைகாள்
நேரதாக வும்முளே யறிந்த்துனர்ந்து கொள்ளுமே.

பூமி முதல் ஆகாயம் வரைக்கும் உள்ள சர்வ இடங்களிலும் இருக்கின்ற பராபரத்தை, அறிந்துகொள்ளும் வழியை உணராமல் சோம்பேறிகளெல்லாம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள். அவர்களுடைய பேச்சைக் கேட்டு ஊர், நாடு , காடு முதலான இடங்களுக்கு சென்று தேடித்தேடி அலுத்த அறிவீனர்களே! இனியாவது உங்களுக்குள்ளாகவே இருக்கும் அந்த இறைவனை உணர்ந்து கொள்ளுங்கள்.

நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழவேண்டு மென்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலனோலை வந்தபோது கையகன்று நிற்பிரே
ஆலமுண்ட கண்டர்பாத மம்மைபாத முண்மையே.


உலகத்தில் வசதியாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நினைத்து, பெரிய வீடு கட்டி, பெரிய கதவையும் வைத்து அடைக்கும் மாந்தரே! காலன் என்னும் எமனின் அழைப்பு வந்தால் நீர் வீட்டை விட்டல்லவா போவீர், நான் சொல்வது (ஆலமுண்ட கண்டன்) சிவன் மற்றும் சக்தி பாதங்களின் பேரிலும் சத்தியமாக மெய்யாகும். 

பாடல்கள் இசை வடிவில் பெற click here.

Comments

Popular posts from this blog

திருமூலரின் அணு ஞானம்

சிவவாக்கியர் பாடல் (தமிழில் வரிகளுடன்)

குதம்பைச் சித்தர் பாடல்கள்