அணுக்களின் செயல்பாடு
பூமியில் உள்ள அசையும்
மற்றும் அசையாப் பொருட்கள் யாவும் அணுக்களால் ஆக்கப்பட்டவை. அணு இல்லையேல்
பிறப்பதேது, இறப்பதேது? கல் என்னும் உயிரில்லா அசையா பொருளே ஆனாலும் அதனுள் இருக்கும்
அணுவில் எலக்ட்ரான்கள் உட்கருவை சுற்றி தான் வருகிறது.
உயிரில் பூதாகாயம, குணமய
ஆகாயம், குணரகித ஆகாயம், சூரியாகாயம், சிதாகாயம் எல்லாம் கலந்தே விளங்குகிறது.
வீட்டின் சாளரத்தில் சூரிய
ஒளிக்கிரணம் பாயும் போது நுண்ணிய ஒளி அணுக்கள் கீழும் மேலும் சென்று கொண்டிருப்பது
விளங்குவது போல உடம்பில் உள்ள முதன்மையான நூற்றியோரு ஒளி அணுக்கள் கீழும் மேலும்
மற்றும் அண்டாகாயத்திலும் சஞ்சரிக்கின்றன.
முதுகுத் தண்டை பற்றியுள்ள
கீழ்நோக்கிச் செல்லக் கூடிய நாடிகள் நூற்றொன்று உள்ளது. அதில் ஒரு நாடி மாத்திரம்
மேல் நோக்கி செல்லும். இந்த நூற்றியொரு நாடியிலும் அணுக்கள் சஞ்சரிக்கின்றன.
இவ்வணுக்கள் பல நிறங்கள்
கொண்டு விளங்குவதால் இவ்வனுக்களின் குவியலை பிறக்கம் ( Collection of atoms) என்று கூறுவர். அணுக்கள் சடமயமானவை.
அவற்றை சேர்த்து வேலை செய்ய வைக்க, சித்துருவாகிய சிவசக்தியும் அவைகளைக் கடந்தும்
அவைகளின் ஊடேயும் நின்று பணி செய்யும் போது சிவசக்தி அவ்வாகாய அணுவுக்குள் அணுவாய்
அறிவாய் சக்தியை உள்ளது. அதனால் அணுவுக்குள் அமரும் சிறியவனாக உள்ளான். ( Atom- Proton, Electron, Neutron, Hibz boson).
உயிர் பிரிந்தவுடன் தூலதேக
அணுக்கள் எப்படித் தங்கள் ஆற்றலை இழந்துவிடுகின்றனவோ அவ்விதமே சூக்கும தேகமும்
சிவசக்தி ஆற்றல் தங்களை விட்டு அகன்றபோது தூல உடலைப் போலத் தனது செயலை இழந்து
விடும் என மாணிக்கவாசகர்.
Comments
Post a Comment