சிவன் அணிந்துள்ள ஆபரணங்களின் உண்மை விளக்கங்கள்-4
சிவன்
காதில் குண்டலங்கள் ஏன் உள்ளது?
ஓர் இடத்தில் இருந்து அதிக
தூரத்தில் உள்ள இன்னொரு இடத்துக்கு பேச்சையும் பாடல்களையும் கம்பியில்லாமல்
அனுப்புவதை தான் ஒலிபரப்புதல் என்கிறோம். ஆகாயத்தில் பரவிக் கிடக்கும் ஈதர் என்று
சொல்லப்படும் மின்காந்த அலைகளின் சக்தி வழியாக அலைகளை அதிக வேகமாக
பரப்புகிறார்கள். இந்த ஈதர் என்பது கண்ணுக்கு புலப்படா சாதனம். ஈதர் பிரபஞ்சம்
முழுவதும் உள்ளது. இது உலகிலுள்ள எல்லா பொருள்களையும் ஊடுருவிச் செல்லும். ஒலி அலைகள் வட்ட வடிவில் உண்டாகின்றன என்பதால்
சிவனது காதுகளில் வட்ட வடிவமான குண்டலங்களை அணிந்திருப்பதாக சித்தரித்து
இருக்கிறார்கள். சப்தங்களை காதுகளின் வழி உணர முடிந்ததால் காதில் குண்டலங்களை
அணிவித்திருந்தார்கள்.
சிவனுக்கு
பூணூல் ஏன்? புலித்தோல் ஏன்?
சிவன் படத்தில் பூணூல் அணிவித்து இருப்பதாக
சித்தரித்து இருப்பது ஏனெனில் வெவ்வேறு இடங்களில் இருந்து வரும் மின்சார அலைகள்
எல்லாம் வெவ்வேறு அலைநீளமுள்ளவை, என்னும் கருத்தை உள்ளடக்கியது. எல்லா அலைகளும்
ஒரே அலை நீளமுடையதாக இருப்பின் சப்தங்கள் ஒன்று சேர்ந்து தெளிவாக கேட்க்க
முடியாது. அதனால் தான் ஒலி பரப்பும் மற்றும் கிரகிக்கும் இடங்களில் வெவ்வேறு அலை
நீளமுள்ள மின்சார அலைகளை உண்டு பண்ணுகின்றனர். அதுபோல சிவன் காதில் உள்ள
குண்டலங்கள் வழியே சப்த அலைகள் குவிக்கப்பட்டு தெளிந்த சப்தம் கேட்கும். சிவன் புலித்தோலை அணிந்திருப்பதால் அவருடைய
உடம்பில் இருந்து மின்சாரம் உட்காரும் இடங்களின் வழியாக வெளியேறாது.
சிவனுக்கு
உடுக்கை எதற்கு?
சிவனுடைய
படத்தில் உடுக்கையைக் கையில் வைத்திருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உடுக்கை
மரக்கட்டையில் துளை செய்து தோலைக் கொண்டு இரு துவாரங்களையும் மூடி இருப்பதால் அதன்
மத்தியில் இருக்கும் கயிற்றில் உள்ள முடிச்சு தோலில் வேகமாக மோதும் போது சப்தத்தை
எழுப்புகிறது. சிவனுடைய சரீரம் தோலால்
ஆனது. காற்று உடம்பில் பாய்ந்து வந்து ஒலியை எழுப்புகிறது. ஆகவே இதை சித்தரிக்க
இந்த ஏற்பாட்டை சித்தர்கள் வரைந்து உள்ளார்கள்.
Comments
Post a Comment