மூவகை பஞ்சாட்சரம்
பஞ்சாட்சரம்
என்கிற நமசிவய என்னும் ஐந்து எழுத்து மந்திரம் உயிர்க்கு உயிர் நாடியாக விளங்குகிறதென்று
மறைகள் கூறுகின்றன.
புறவழிபாட்டுக்கான
பஞ்சாட்சரம்- நமசிவாய
இதில் “ந”கரம்
– பிருத்திவி தத்துவத்தையும்
மகரம் –
அப்பு தத்துவத்தையும்
சிகரம்-
தேயு தத்துவத்தையும்
வகரம்-
வாயு தத்துவம்
யகரம்-
ஆகாய தத்துவத்தையும் குறிக்கும்.
பஞ்சாட்சரத்தில்
1. தூலம் 2. சூக்குமம் 3. அதிசூக்குமம் என
மூவகை உண்டு.
தூல
பஞ்சாட்சரம்- சிவாயநம
சிவாயநம என
மானசீகமாக சொன்னால், சூக்கும அசைவுகள் ஆகாய அணுக்களில் ஏற்ப்பட்டு ஆகாயத்தில்
சேர்ந்த மூலாதாரம் முதலாக நிற்கும். நமசிவாய என்ற தேவனை தேகத்தில் சேர்க்கும்.
சூக்கும
பஞ்சாட்சரம்- சிவாயநம ஒளி அலைகள்
“சிவாயநம” என்பதை ஒளியாக நினைத்து ஓதல் சூக்கும
பஞ்சாட்சரமாகும். இத்திருவைந்தெழுத்தில் சிகரம்- சிவனையும், வகரம்- சக்தியையும்,
யகரம்- சீவனையும், நகரம்- மலத்தையும், மகரம்- மாயையையும் குறிக்கும். இந்த
பஞ்சாட்சர செபத்தால் துன்பம் தரும் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகியக
ஐம்மலங்களையும் நீக்கும்.
சிவாயநம
என்னும் திருவைந்தெழுத்தைச் செபிக்கும் முறையில் ‘நம’ என்ற எழுத்தை நாவின் உள்ளே
கண்டத்தில் அடக்கி சிவ என்னும் திருநாமத்தை சிரசின் மேல மன மண்டலத்தில் நினைக்க
வேண்டும். அப்படி நினைத்து வர ஆன்ம ஒளி பெருகும் பெருகும் என்கிறார் திருமூலர்.
அதிசூக்கும
பஞ்சாட்சரம்- சிவாய சிவ சிவ
சிவாயநம
என்று செபித்துச் சித்தத்தைப் புறத்தே செல்லவிடாது உள்ளே நிறுத்தித் துன்பம்
நீங்கச் “சிவாய சிவசிவ” மந்திரத்தை பலமுறை சித்தத்தில் எண்ணவே துன்பங்கள் நீங்கி
ஆனந்தமுண்டாகும். அதிசூக்கும பஞ்சாட்சர செபத்தால் மூலாதாரத்திலுள்ள அக்னி சூரிய
மண்டலத்தைக் கடந்து சென்று தோளுக்கு மேல் விளங்கும் சந்திர மண்டல ஒளியில் ஐம்புலன்
அறிவுக்கும் அடங்கும் முறையில் சாதகர் என்றும் சிவத்தைப் பிரியாதிருக்கும் நிலையை
அடைவர்.
Comments
Post a Comment