Posts

Showing posts from February, 2013

இடைக்காடர் - முன்னுரை

Image
18 சித்தர்களில் யார் பெரியவர் ?யார் சிறியவர் ? என்ற வினா   பொதுவாக மக்களிடத்தே நிலவுகின்றது. அவர்கள் அனைவரும் ஒரே மதிப்புடையவர்கள் தான் எனபது மட்டுமே உண்மை. ஒருவர் மருத்துவத்தில் சித்தம் பெற்றிருந்தால் இன்னொருவர்  வான அறிவியலில் சித்தம் பெற்றிருந்தார் . இவ்வாறாக பல்வேறு துறைகளில் சித்தம் கண்டனர். அவர்களில் ஒருவரான சித்தர் இடைக்காடர் எனும் வானவியல் வல்லுநர்  பற்றியும் அவரின் பாடல்களையும் இனி காண்போம் . சித்தர் இடைக்காடர் - பற்றி  பிறப்பு :மதுரைக்கு கிழக்கே உள்ள கோனார்கள் கிராமமான இடைப்பாடி எனும் ஊரில் இடையர் குலத்தில் தோன்றியவர் . குரு : போகர் மற்றும் கருவுரார்  சீடர் :அழுகினி சித்தர் மற்றும் குதம்பை சித்தர்  தினம் செய்தது :   ஆடு மாடு மேய்ப்பதும்   -புல்லாங்குழல் ஊதுதலும்   -யோகத்தில் ஆழ்ந்து விடுவது .  ஞானம் பெற்றமை :  இவர் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு சதா இறைசிந்தனையில் மனம் லயித்து துறவு நிலையில் வாழ்க்கை நடத்திகொண்டிருந்த இவரை, போகர் வந்து பால் கேட்க -அவருக்கு பால் மற்றும் இதர உண...

அழுகண்ணிச் சித்தர் பாடல்கள்

Image
அழுகண்ணிச் சித்தர் பாடலுக்கு இங்கே சொடுக்கவும் . To download Azhukannich siddhar Song (pdf) , Click here .

இடைக்காடர் சித்தம் - 7

Image
பாடல் எண் :79 ஐம்பொறி அடங்கினவே   தும்பீபற - நிறை   அருவே பொருளாம் எனத்தும்பீபற   செம்பொருள்கள் வாய்த்தனவே   தும்பீபற - ஒரு   தெய்வீகம் கண்டோம் என்றே   தும்பீபற .

இடைக்காடர் சித்தம்- 6

Image
பாடல் எண் ;66 சாகாது இருப்பதற்குத்தான் கற்ற கல்வி அன்றோ   வாகான மெய்க்கல்வி வகுத்தறி நீ கல்மனமே . பிறப்பு - இறப்பு என்ற வரிசையில் மரணத்தை தவிர்க்க வழிமுறைகளை போதிக்கும் ஞானமே   உண்மையான கல்வி . இதை நீ உணர்ந்து கொள் . பாடல் எண் :67 எல்லாப் பொருள்களையும் எண்ணப்படி படைத்த   வல்லாளன் தன்னை வகுத்தறி நீ புல்லறிவே . அற்ப - அறிவுடைய மனிதனே - பிரபஞ்சத்தையும் அதில்   உள்ள எல்லாப் பொருளையும் தன் எண்ணப்படி படைத்துள்ளான் . அற்ப அறிவுடைய மானிடனே இறைவனை நன்குணர்ந்து கொள்வாயாக . பாடல் எண் :68 கட்புலனுக்கு எவ்வளவுங் காணாது   இருந்தெங்கும்   உட்புலனாய் நின்ற ஒன்றை உய்த்தறி நீ புல்லறிவே . அற்ப அறிவுடைய மானிடனே ! பரம்பொருளை எப்படி நோக்கினும் உன் புறக்கண்களால் காண முடியாது . எல்லாவற்றிலும் இறைவன் மறைந்தே இருக்கிறான் . இந்த நுட்பத்தை   அற்ப அறிவுடைய நீ விரிவாக அறிந்து கொள் . பாடல் எண் :69 விழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்கம் உண்டாகும் ...