இடைக்காடர் - முன்னுரை

18 சித்தர்களில் யார் பெரியவர் ?யார் சிறியவர் ? என்ற வினா பொதுவாக மக்களிடத்தே நிலவுகின்றது. அவர்கள் அனைவரும் ஒரே மதிப்புடையவர்கள் தான் எனபது மட்டுமே உண்மை. ஒருவர் மருத்துவத்தில் சித்தம் பெற்றிருந்தால் இன்னொருவர் வான அறிவியலில் சித்தம் பெற்றிருந்தார் . இவ்வாறாக பல்வேறு துறைகளில் சித்தம் கண்டனர். அவர்களில் ஒருவரான சித்தர் இடைக்காடர் எனும் வானவியல் வல்லுநர் பற்றியும் அவரின் பாடல்களையும் இனி காண்போம் . சித்தர் இடைக்காடர் - பற்றி பிறப்பு :மதுரைக்கு கிழக்கே உள்ள கோனார்கள் கிராமமான இடைப்பாடி எனும் ஊரில் இடையர் குலத்தில் தோன்றியவர் . குரு : போகர் மற்றும் கருவுரார் சீடர் :அழுகினி சித்தர் மற்றும் குதம்பை சித்தர் தினம் செய்தது : ஆடு மாடு மேய்ப்பதும் -புல்லாங்குழல் ஊதுதலும் -யோகத்தில் ஆழ்ந்து விடுவது . ஞானம் பெற்றமை : இவர் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு சதா இறைசிந்தனையில் மனம் லயித்து துறவு நிலையில் வாழ்க்கை நடத்திகொண்டிருந்த இவரை, போகர் வந்து பால் கேட்க -அவருக்கு பால் மற்றும் இதர உண...